டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் பங்கேற்ற கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன்!

கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, டெல்லியில் உள்ள கியூபா நாட்டின் தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.


கோவை: டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூக்கின் அருகில் இருந்து கொண்டு சோசலிச செம்பதாகையை உயர்த்திப் பிடித்து வரும் தேசம் கியூபா . கொரானா பெருந்தொற்றின் போது 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது மருத்துவ குழுவை அனுப்பி சேவை ஆற்றிய நாடு.

தரமான கல்வி, தனிச்சிறப்பு மிக்க மருத்துவம் ஆகியவற்றை தனது குடிமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கி வரும் நாடு கியூபா. அத்தகைய சிறப்பு பெற்ற கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு இன்று புதுடெல்லியில் இந்தியாவிற்கான கியூபா தூதரகம் புரட்சி தின விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் நான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். இந்தியாவிற்கான கியூபா தூதர் அலெக்சாண்டரோ சிமன்காஸ் மாரீன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை இந்திய மக்களின் சார்பாக தெரிவித்தோடு, கியூபா நாட்டின் மீதான இந்திய மக்களின் நேசம் என்றென்றும் தொடரும் என்றும் தெரிவித்தேன்.



பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக கியூபா புரட்சி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் தோழர் சே குவேரா தலைமையில் நடைபெற்ற மகத்தான கியூப புரட்சி குறித்தும், அது கியூப சமூகத்தில் ஏற்படுத்திய அற்புதமான மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...