தையல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஓய்வூதியத்தை ரூ.3,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தையல் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அனைத்து விதமான பண பயன்களையும் உயர்த்தி வழங்க வேண்டும், ஆன்லைன் சர்வர்களில் அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்திட வேண்டும். அனைத்து பண பயன்களும் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தையல் கூட்டுறவு சங்கத்தில் தமிழக அரசின் இலவச சீருடை தைக்கும் தையல் தொழிலாளர்களுக்கு எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கூலியை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அமைப்பு சாரா சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...