தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - முதல்வருக்கு நன்றி தெரிவித்த திமுக செயலாளர் இல.பத்மநாபன்

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், நான்காவது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தீரன் சின்னமலை நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த முதலமைச்சருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக அவரது நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் இதனை கொண்டாட கூடிய வகையில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் , மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இதனை ஏற்று தற்போது தமிழக முதல்வர் ஆடி பதினெட்டாம் நாள் தீரன் சின்ன மலை நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், இந்த உத்தரவை அறிவித்த தமிழக முதல்வருக்கும், பரிந்துரை செய்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கும் இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...