இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

வீரபாண்டி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜனின் ஓட்டுனர் எனக்கூறி இலவச வீட்டு மனை பட்டா பெற்று தருவதாக கூறி சுமார் 14 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர்: இலவச வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக கூறி 14 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரிடம் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வீரபாண்டி பகுதி சேர்ந்த சங்கர் என்பவர், தான் பல்லடம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜனிடம் ஓட்டுனராக வேலை செய்வதாகவும் தனக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளை நன்கு தெரியும் என கூறியுள்ளார்.

இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவதற்கு நபர் ஒன்றுக்கு 30,000 கொடுத்தால் உடனடியாக வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சுண்ட மேடு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்த போது, சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஐந்தாயிரம், பத்தாயிரம் என சிறுக சிறுக பணத்தை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இவ்வாறு கடந்த ஆறு மாதத்தில் சுமார் 14 லட்சம் ரூபாய் வசூல் செய்து சங்கரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சங்கர் பணம் கொடுத்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை.



இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி 14 லட்சம் வரை ஏமாற்றிய சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...