பல்லடத்தில் பாட்டிலுக்கு ரூ.15 அதிகமா? - வெகுண்டெழுந்த விசைத்தறி உரிமையாளர்!

பல்லடம் அருகே பனானா லீஃப் என்ற தனியார் உணவகத்தில் வழங்கப்பட்ட பில்லில் கூடுதல் தொகை அச்சிடப்பட்டிருந்ததை தட்டி கேட்டதற்கு, முறையாக பதில் அளிக்காமல், ஆட்களை வைத்து மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் உணவகத்தில் வழங்கப்பட்டபில்லில் கூடுதல் தொகை அச்சிடப்பட்டிருந்ததை கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாரணாபுரத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார்(37).விசைத்தறி உரிமையாளரான இவர், மகாலட்சுமி நகருக்கு அருகே செயல்பட்டு வரும் பணானா லீஃப் ரெஸ்டாரண்டிற்கு தனது குழந்தையுடன் சென்றுள்ளார்.

பின்னர் தனது குழந்தைக்கு சிக்கன் ரைஸ், மஞ்சூரியன் மற்றும் பெப்சி ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார். அவர் செய்த ஆர்டருக்குரிய பில்லை சப்ளையர் ராஜ்குமாரிடம் கொடுத்துள்ளார். பில்லை பார்த்த ராஜ்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.



பெப்சியின் எம்.ஆர்.பி விலை ரூ.40 என பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் ரூ.15 அதிகமாக பில்லில் போடப்பட்டிருப்பதற்கு விளக்கம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்காமல் சப்ளையர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெண் ஊழியர் மற்றும்.அங்கிருந்த ஊழியர்களிடம் ராஜ்குமார் முறையிட்டும் பதில் கூறாமல் அடியாட்களை கொண்டு மிரட்டியதோடு முழுத்தொகையையும் வாங்கி கொண்டு ரெஸ்டாரண்டில் இருந்து வெளியேற்றினர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய ராஜ்குமார் கூறியதாவது, அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை பொருட்களை செய்யும் பணானா லீஃப் ரெஸ்ட்டாரண்ட் மீது நடவடிக்கை எடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வாங்கிய விவகாரத்தில் சர்ச்சை முடிவதற்குள் கூல்டிரிங்ஸ் பாட்டிலுக்கு மேல் ரூ. 15 அதிகம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...