பழங்குடியின தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாக அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி

கோவை ஆனைக்கட்டியில் உள்ள அரசு பழங்குடியின தொழில் பயிற்சி மைய மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை தனது சொந்த செலவில் வழங்குவதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் வாக்குறுதி அளித்தார்.



கோவை: ஆனைக்கட்டியில் உள்ள பழங்குடியின தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சொந்த செலவில் வழங்குவதாக அமைச்சர் சி.வி.கணேசன் உறுதியளித்துள்ளார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் கலந்து கொண்டார்.



அப்பொழுது ஆனைகட்டியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியின தொழிற்பயிற்சி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.



அப்பொழுது அங்கிருந்த மாணவ மாணவியரின் தொழில் பயிற்சிகளை பார்வையிட்ட அமைச்சர் உங்களுக்கு என்ன தேவை என்று மாணவர்களிடம் கேட்டார்.

அதற்கு மாணவர்கள் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் எனவும் மேலும் பெண்களுக்கு தனி தங்கும் விடுதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக மாணவ மாணவியருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை தனது சொந்த செலவில் உடனடியாக வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார். மேலும் பெண்களுக்கான தனி தங்கும் விடுதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.



அதை தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலமாக 97.85 லட்சம் மதிப்பீட்டில் ஆனைகட்டி மற்றும் சீங்குளி பகுதிகளில் தார் சாலைஅமைக்கும் பணிகளை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி காரமடைமேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், ஒன்றிய அவை தலைவர் ஆனைகட்டி மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...