மகளிர் உரிமைத் தொகை திட்ட நிதி சர்ச்சை - தேசிய பட்டியலின ஆணையத்தின் கடிதம்!

பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு மகளிர் உரிமை திட்டத்திற்காக பயன்படுத்துகிறதா என விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு பட்டியலின ஆணையத்தின் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் ஆளுநரின் செயலர் உள்ளிட்டோர் 15 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னை: பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு மகளிர் உரிமை திட்டத்திற்காக பயன்படுத்துகிறதா என விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு பட்டியலின ஆணையத்தின் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான, செப்.,15ல் துவக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பட்டியலின மக்களுக்கான நிதியை மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக தமிழக அரசு மாற்றியுள்ளதாக இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச்செயலர் அன்புவேந்தன், தேசிய பட்டியலின ஆணையத்தில், புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, ஆணைய இயக்குனர் ரவிவர்மன், தமிழக அரசு, தலைமை செயலர் மற்றும் ஆளுநரின் தலைமை செயலருக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், 15 நாட்களுக்குள் தகுந்த ஆதாரங்களுடன், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நீதிமன்றம் வாயிலாக சம்பந்தப்பட்டவர்கள், ஆணையம் முன் நேரில் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்படும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...