தாராபுரம் அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் - விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

தாராபுரம் அடுத்த கொங்கனாபுரம் பிரிவு அருகே இன்னோவா காரின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீதி பயங்கரமாக மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: தாராபுரத்தில் 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை சேர்ந்த கிருபாகரன் (24) சஞ்சய் (24) ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உறவினரான சந்திரன் (60) என்பவருடன் காரில் மதுரையில் இருந்து கோவை நோக்கி தாராபுரம் வழியாக நான்கு வழிச்சாலையில் கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த இனோவா காரில் தாராபுரத்தில் சுகம் விதை பண்ணை நடத்தி வரும் ஆத்துக்கால்புதூரை சேர்ந்த விஜயகுமார் (35) மற்றும் சிவகுமார் (42) ஆகியோர் கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் எதிர்நோக்கி வந்துள்ளனர்.



இந்த நிலையில், இன்னோவா காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் கார், சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் சென்று கொண்டிருந்த காரின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.



இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் இரு கார்களிலும் பயணித்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.



காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மீட்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.



அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் மருத்துவமனைகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...