பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் தீயிட்டு எரிப்பு - அதிர்ச்சி!

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்ட நிலையில், அலுவலகத்தின் பின்புறம் தீயிட்டு எரிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், 20 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய பல்லடம் தாலுக்கா வட்டாட்சியராக ஜெய்சிங் சிவக்குமார் என்பவர் உள்ளார். மேலும் பொதுமக்கள் அன்றாடம் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மனுதாரருக்குறிய தீர்வு காணப்படுவது வழக்கம்.



இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டவை அலுவலக பின்புறமாக குப்பையில் எரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இந்நிலையில் துணை ஆட்சியர் சுதன் ஜெய் நாராயணன் தலைமையில் ஆய்வு கூட்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருந்தது.



இதனையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை ஆட்சியரிடம் குப்பையில் கிடந்த மனுக்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இச்சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...