அவிநாசி சாலையில் பொருத்தப்பட்ட வேக அளவீட்டு கருவி மூலம் இதுவரை அபராதம் விதிக்கப்படவில்லை - மாநகர காவல் ஆணையர் தகவல்!

கோவை - அவிநாசி சாலையில் வைக்கப்பட்டுள்ள 40 கிலோமீட்டர் தானியங்கி வேக அளவீட்டு கருவியின் மூலமாக இதுவரை யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: அவிநாசி சாலையில் உள்ள தானியங்கி வேக அளவீட்டு கருவியின் மூலமாக இதுவரை அபராதம் விதிக்கப்படவில்லை என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,



கோவை அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யு டர்ன் வசதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது.

பாதசாரிகள் நின்று செல்ல 30 வினாடி அவகாசமும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல சுங்கம் பகுதியில் போக்குவரத்தை கண்காணிக்க o voilence 13 கேமராக்கள் பொருத்தி உள்ளோம்

அவிநாசி சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு ஈ சாலன் போடப்படும் என தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, அவிநாசி சாலையில் இளைஞர்கள் இரவு நேரங்களில் அதிகமான வேகத்தில் சென்று வருகிறார்கள்.

விபத்தை கட்டுப்படுத்தவே பொருத்தப்பட்டு உள்ளது, பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக பொருத்தப்படவில்லை இதுவரை யாருக்கும் சலான் அனுப்பவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு 413 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது 2023 ஆண்டு 369 விபத்துக்கள் நடைபெற்றது, அதேபோல 2022 ஆம் ஆண்டு 139 விபத்து இறப்புகள் நடை பெற்று உள்ளது. 2023ஆம் ஆண்டு 119 விபத்து இறப்புகள் நடைபெற்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...