தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்!

தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை முதல் அமராவதி ஆறு வரை ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் தேதி பெண்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி வரும் அமராவதியை வரவேற்கும் விழாவாகும்.

இதனையொட்டி, தாராபுரம் அமராவதி ஆற்றின் கரைகள் மற்றும் நீர் நிலைகளில் பெண்கள் காப்பரசி, ஆப்பிள், விலாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்கள், காதோலை கருகமணி போன்ற பொருள்களை வைத்து அமராவதி தாயை வழிபட்டனர். ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.

இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.



500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை வீதி டி.எஸ் கார்னர் பெரிய கடை வீதி எண்பேட்டை 5 சாலை சந்திப்பு வழியாக அமராவதி ஆற்றை வந்து அடைந்தனர்.



அங்கு அவர்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை அமராவதி ஆற்றில் விட்டனர்.



அமராவதி ஈஸ்வரன் கோவிலில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் முருக பெருமானை பற்றி பாடி வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.



அதனைத் தொடர்ந்து அங்கு விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு இருந்தது அங்கே ஏராளமான குழந்தைகள் சிறுவர்கள் பெரியவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.



முளைப்பாரி ஊர்வலத்தின் போது இளைஞர்கள் ட்ரம் செட் அடித்து ஆட்டம் பாட்டம் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...