துடியலூர் கருப்பராயர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கருப்பராயர் திருக்கோவிலில் ஆடி 18ம் நாளை ஒட்டி ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பராயன் சுவாமியை தரிசனம் செய்தனர்.



கோவை: துடியலூரை அடுத்த வடமதுரை கருப்பராயர் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே.நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கருப்பராயர் திருக்கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கருப்பராயன் சுவாமி வி எஸ் கே நகர் மற்றும் சார்பு நகரங்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது.

இக்கோவிலில் ஆடி 18ம் நாளை ஒட்டி ஆடிப்பெருக்கு திருவிழா ஓவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கருப்பராயன் சுவாமிக்கு பால், தயிர், நெய், திருநீர், சந்தம், இளநீர் உள்ளிட்ட அபிசேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.



இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பராயன் அருளைப் பெற்றனர்.



தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கேசரி, சுண்டல், பொங்கல், சாம்பார் சாதம் உள்ளிட்ட மகா அன்னதானம் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பராயன் திருக்கோவில் விழா குழுவினர் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் சுந்தரம், விஸ்வநாதன், தங்கவேலு, நாகசாய், ஜனார்த்தனன், விஜயகுமார் உள்பட வி எஸ் கே நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...