தாராபுரம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய 9 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்!

தாராபுரம் அடுத்த பழனிரோடு அருகே அனுமதியின்றி 5 கோடி மதிப்பிலான செம்மண் ஏற்றிச் சென்ற 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் லாரிகளை கைப்பற்றிய வருவாய் துறையினர், அதனை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே செம்மண் கடத்திச் சென்ற கேரளாவை சேர்ந்த 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி சேம்பர்களுக்கு பர்மிட் இல்லாமலும், அதிக பாரத்துடன் செம்மண் லாரிகள் இயக்கப்படுவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கேரளா மாநில லாரிகளை பிடித்து பறிமுதல் செய்துள்ளார்.



இந்நிலையில் தாராபுரம் பழனிரோடு நளினி காலேஜ் ரவுண்டானா அருகே உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த 9‌ கேரளா மாநில லாரிகளை பொதுமக்கள் தடுத்து சிறைபிடித்தனர்.



பின்னர் இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியருக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.



விதிமுறைக்கு புறம்பாக செம்மண் லோடு ஏற்றிவந்த 9 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாராபுரம் நகர வருவாய் ஆய்வாளர் சரவணன் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...