குடும்ப தகராறில் 3 வயது குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் - பரபரப்பு!

கோவை செட்டிபாளையம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கையில் 3 வயது குழந்தையுடன் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில், போலீசார் எட்டு மணி நேரமாக போராடி அவரையும் குழந்தையும் சமாதானம் செய்து பத்திரமாக மீட்டனர்.


கோவை: செட்டிபாளையம் அருகே குடும்பத்தகராறில் 3 வயது குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கோவை செட்டிபாளையம் எம்.ஆர் நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகறாரு இருந்து வந்துள்ளது.

இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு கணவன் - மனைவி பிரச்சினையில் தனது தாய் வீட்டிற்கு சென்ற மனைவி காளீஸ்வரியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி செட்டிபாளையம் பகுதியிலுள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த செல்வத்தை பல மணி நேரம் போராடி மீட்ட காவல்துறையினர் இருவரையும் சேர்த்து வைத்தனர்.

தொடர்ந்து கணவன் - மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காளீஸ்வரி மீண்டும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த செல்வம் நேற்று மாலை தனது குழந்தைகளை பார்ப்பது போல் காளீஸ்வரியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மூன்று வயது மகனை தூக்கி கொண்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள சுமார் 250 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரத்தில் ஏறி தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் நின்று மிரட்டல் விடுத்த செல்வத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் சமாதானத்தை ஏற்க மறுத்த செல்வமோ, தனது சொந்த ஊரான சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் இன இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து தனது குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் அப்போதுதான் தான் கீழே இறங்குவேன் என கூறி கோபுரத்தின் மீது குழந்தையுடன் அமர்ந்து கொண்டார்.

நேற்று மாலை 5 மணிக்கு செல்போன் கோபுரத்தில் ஏறிய அந்த நபர் காவல்துறையினர், பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் என பலரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போதும் இறங்காமல் அங்கேயே இருந்தார்.

நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அங்கு வந்த அவரது மனைவி காளீஸ்வரி இனிமேல் சேர்ந்து வாழ்வேன் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் குழந்தையுடன் கீழே இறங்கினார் போதை ஆசாமி செல்வம்.

இதை அடுத்து குழந்தையுடன் அந்த நபரை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் வாகன மூலம் இருவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி, செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த செல்வம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...