முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி உடுமலையில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம்!

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு, மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: உடுமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் 2000க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கி மத்திய பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.



திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலமானது, பழைய பஸ் நிலையம் பைபாஸ் ரோடு வழியாக வந்து மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது.



இந்த அமைதி பேரணியில் உடுமலை நகராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான வேலுச்சாமி, நகராட்சி தலைவர் மத்தீன், குடிமங்கலம் வடக்கு ஓன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி, வழக்கறிஞர் செந்தில்குமார், யூ.என்.பி.குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக் அலி உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...