உலக தாய்ப்பால் வாரம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய செவிலியர்கள்!

கோவை ESI மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, INNER WHEEL CLUB-ன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், செவிலியர்கள் கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவையில் INNER WHEEL CLUB-ன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறது.



கோவை ESI மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை IWC, கோவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு IWC, கோவை சினெர்ஜியின் IWC உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினர்.



அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இதில் ஏராளமான ஒரு கலந்து கொண்டு தாய்ப்பால் வாரம் குறித்தும் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்நிகழ்வில் மருத்துவமனை செவிலியர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...