கோவையில் மாதிரி வாக்குப்பதிவு - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் விஜயலட்சுமி, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...