சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் படங்களை வரைந்து அசத்திய கோவையை சேர்ந்த நகை வடிவமைப்பாளர்!

கோவை குனியமுத்தூரை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளரான யூ.எம்.டி.ராஜா என்பவர், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சீத்தாப்பழத்தில், மகாத்மா காந்தி, கட்டபொம்மன், காமராஜர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தலைவர்களின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த நகை வடிமைப்பாளர் ஒருவர், ஒரு சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.



கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யூ.எம்.டி.ராஜா, தங்க நகை வடிவமைப்பாளராக பணி செய்து வரும் இவர் அரிசி, மாங்கனி, முட்டை ஓடு, சோப்பு, மெழுகு உள்ளிட்டவையில் வித்தியாசமான முறையில் படங்களை வரைவதில் வழக்கமாக கொண்டுள்ளார்.



இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தேச தலைவர்களை போற்றும் விதமாக கனிந்தவர்கள், முதிர்ந்தவர்கள், இனிமையானவர்கள் என்பதை உணர்த்தி சீத்தாப்பழத்தில் அவர்களது படத்தை துல்லியமாக வரைந்து அசத்தியுள்ளார்.



சீதாப்பழத்தில் உள்ள கணுவில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத், பாரதியார்,நேரு, வேலு நாச்சியார், அம்பேத்கர், அப்துல் கலாம், வீரபாண்டிய கட்டபொம்மன், காமராஜர் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட தேசத் தலைவர்களின் படங்களை பல வண்ணங்களில் வரைந்துள்ளார்.



சுமார் 12 மணி நேரத்தில் தேச தலைவர்களின் படங்களை வரைந்த யூ.எம்.டி.ராஜாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...