சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் படங்களை வரைந்து அசத்திய கோவையை சேர்ந்த நகை வடிவமைப்பாளர்!

கோவை குனியமுத்தூரை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளரான யூ.எம்.டி.ராஜா என்பவர், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சீத்தாப்பழத்தில், மகாத்மா காந்தி, கட்டபொம்மன், காமராஜர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தலைவர்களின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த நகை வடிமைப்பாளர் ஒருவர், ஒரு சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.



கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யூ.எம்.டி.ராஜா, தங்க நகை வடிவமைப்பாளராக பணி செய்து வரும் இவர் அரிசி, மாங்கனி, முட்டை ஓடு, சோப்பு, மெழுகு உள்ளிட்டவையில் வித்தியாசமான முறையில் படங்களை வரைவதில் வழக்கமாக கொண்டுள்ளார்.



இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தேச தலைவர்களை போற்றும் விதமாக கனிந்தவர்கள், முதிர்ந்தவர்கள், இனிமையானவர்கள் என்பதை உணர்த்தி சீத்தாப்பழத்தில் அவர்களது படத்தை துல்லியமாக வரைந்து அசத்தியுள்ளார்.



சீதாப்பழத்தில் உள்ள கணுவில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத், பாரதியார்,நேரு, வேலு நாச்சியார், அம்பேத்கர், அப்துல் கலாம், வீரபாண்டிய கட்டபொம்மன், காமராஜர் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட தேசத் தலைவர்களின் படங்களை பல வண்ணங்களில் வரைந்துள்ளார்.



சுமார் 12 மணி நேரத்தில் தேச தலைவர்களின் படங்களை வரைந்த யூ.எம்.டி.ராஜாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...