சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை!

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் பள்ளி, கோவையை சேர்ந்த பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மேற்கொண்டனர்


கோவை: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது.



வருகின்ற 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள அரசு சார்பில் மாவட்டங்களில் தோறும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் உட்பட பல்வேறு செயல்களில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அதன்படி கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவார்.

அதனைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் அமைப்பினரும் கலந்து கொள்வர்.



இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.



உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் பள்ளி கோவையை சேர்ந்த பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனை கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி நேரில் பார்வையிட்டார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...