மீன் வாங்கினால் தக்காளி இலவசம் - வாடிக்கையாளர்களை கவரும் மீன் கடை!

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வரும் ஜாபர் என்பவர் தனது கடைக்கு மீன் வாங்குவோர்க்கு கால் கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். இந்த சலுகை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இது இன்றும் நாளையும் மட்டுமே கிடைக்கும் என அறிவித்துள்ளார்.


கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கினால் தக்காளி இலவசமாக கிடைக்கும் என்று ஜாபர் என்பவர் அறிவித்துள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து மீம்ஸ் மற்றும் காமெடி பதிவுகளை வலைதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கூட மணமக்களுக்கு தக்காளி அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து வருவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளியை அரசாங்கமே நேரடியாக கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.



இந்நிலையில் கோவையில் மீன் கடை நடத்தி வருபவர் அவரது கடையில் மீன் வாங்குவோர்க்கு இலவசமாக கால் கிலோ தக்காளியை வழங்கி வருகிறார். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இன்றும், நாளையும் மீன் வாங்குபவர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுப்பதாகவும் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...