மீன் வாங்கினால் தக்காளி இலவசம் - வாடிக்கையாளர்களை கவரும் மீன் கடை!

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வரும் ஜாபர் என்பவர் தனது கடைக்கு மீன் வாங்குவோர்க்கு கால் கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். இந்த சலுகை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இது இன்றும் நாளையும் மட்டுமே கிடைக்கும் என அறிவித்துள்ளார்.


கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கினால் தக்காளி இலவசமாக கிடைக்கும் என்று ஜாபர் என்பவர் அறிவித்துள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து மீம்ஸ் மற்றும் காமெடி பதிவுகளை வலைதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கூட மணமக்களுக்கு தக்காளி அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து வருவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளியை அரசாங்கமே நேரடியாக கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.



இந்நிலையில் கோவையில் மீன் கடை நடத்தி வருபவர் அவரது கடையில் மீன் வாங்குவோர்க்கு இலவசமாக கால் கிலோ தக்காளியை வழங்கி வருகிறார். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இன்றும், நாளையும் மீன் வாங்குபவர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுப்பதாகவும் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...