சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் - ஈஷா கிராமோத்சவம் குறித்து வீடியோ மூலம்‌ சத்குரு அறிவுரை!

நம்‌ வாழ்க்கையில்‌ சுறுசுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும் என கிராமாத்சவம் விளையாட்டு வீரர்களுக்கு சத்குரு கூறியுள்ளார்‌.


கோவை: சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் என ஈஷா கிராமோத்சவம் குறித்த வீடியோவில்‌ சத்குரு அறிவுறுத்தியுள்ளார்.



இந்தியாவின்‌ மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழாவான 15வது ஈஷா கிராமோத்சவம்‌ இன்று தொடங்குகிறது.



இது தொடர்பாக சத்குரு அவர்கள்‌ வெளியிட்டுள்ள விடியோவில்‌, நம்‌ பாரத கலாச்சாரத்தில்‌ வாழ்க்கையையே ஒரு விழாவை போல்‌ கொண்டாட்டமாக வைத்து இருந்தோம்‌.

நம்‌ தேசத்தில்‌ 365 நாட்களும்‌ ஏதோ ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும்‌. விழா என்றால்‌ வேலை செய்ய கூடாது. விடுமுறை எடுக்க வேண்டும்‌, அதிகமாக சாப்பிட வேண்டும்‌ என்பது அல்ல. எப்போது நீங்கள்‌ எல்லா செயல்களையும்‌ கொண்டாட்டமாக செய்கிறீர்களோ அதுவே ஒரு விழா தான்‌.

நம்‌ கிராமங்களில்‌ உழவு செய்யும்‌ போது, நெசவு நெய்யும்‌ போது, சமையல்‌ செய்யும்‌ போது, குழந்தையுடன்‌ விளையாடும்‌ போது என எந்த செயல்‌ செய்தாலும்‌ அதில்‌ ஒரு பாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இருக்கும்‌.

எப்போது நம்‌ வாழ்வில்‌ இந்த கொண்டாட்ட தன்மையை இழக்கிறோமோ அப்போது மன அழுத்தம்‌ வரும்‌. நம்‌ வாழ்க்கையில்‌ சுறு சுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும்‌.

உங்களுடைய பாட்டி சீரியஸ்‌ ஆக இருக்கிறார்‌ என்றால்‌ என்ன அர்த்தம்‌? அவர்‌ போவதற்கு தயாராகிவிட்டார்‌ என்று தானே அர்த்தம்‌. நீங்கள்‌ அப்படி ஆக கூடாது. எப்போதும்‌ சுறு சுறுப்பாகவும்‌ புத்துணர்வாகவும்‌ இருக்க வேண்டும்‌.

உங்களுக்குள்‌ விளையாட்டு தன்மையை கொண்டு வர எங்கோ சென்று போட்டி போட வேண்டும்‌ என்று அவசியம்‌ இல்லை. உங்கள்‌ விட்டிலேயே குடும்பத்தினருடன்‌ விளையாடி கொள்ளலாம்‌.

கிராமங்களில்‌ கூட இப்போது வெறும்‌ பணத்தை மட்டும்‌ கணக்கு போட்டு கொண்டு இருப்பதால்‌ மன அழுத்தம்‌ அதிகமாகிவிட்டது. சமூகங்களில்‌ ஜாதி, மதம்‌ என பல விதமான பாகுபாடுகள்‌ வந்துவிட்டது.

இதற்காக தான்‌ ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா. 2004-ம்‌ ஆண்டு இதை முதல்‌ முறையாக தொடங்கினோம்‌. இப்போது 15 வது ஈஷா கிராமோத்சவம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்கி செப்‌.23-ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது. இகில்‌ 60,000-க்கும்‌ மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்‌ ஈடுபடுகிறார்கள்‌.

இவர்கள்‌ எல்லாம்‌ நன்கு தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள்‌ கிடையாது. வீட்டில்‌ சமையல்‌ செய்யும்‌ பாட்டியும்‌ அவருடைய பேரன்‌ பேத்திகளும்‌ ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக இதில்‌ விளையாடுகிறார்கள்‌.

இதுபோன்ற ஒரு மிகப்பெரிய கிராமிய விளையாட்டு போட்டி உலகத்தில்‌ வேறு எங்கும்‌ இல்லை என கூறலாம்‌. அந்தளவிற்கு மிகப்‌ பெரிய அளவில்‌ மிக உற்சாகமாக நடக்க உள்ளது. எனவே, இந்த ஈஷா கிராமோத்சவத்தில்‌ அனைவரும்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.

இப்போது நம்‌ பாரத தேசம்‌ பொருளாதாரத்தில்‌ முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில்‌ நம்‌ வாழ்வில்‌ விளையாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இல்லாமல்‌ போய்விட்டால்‌ பொருளாதாரத்தை வைத்து என்ன செய்வது?.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...