தடாகம் அருகே பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது!

தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



கோவை: கோவை தடாகம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடையே போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையில் மாணவ மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.



மேலும் கணுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடங்கள் நடைபெற்றது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...