வாளையாறு சோதனை சாவடியில் ஆடையில் மறைத்து வைத்து சுமார் ரூ.25 லட்சம் பணம் கடத்திய நபர் கைது!

தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடி போலீசார் சோதனையின் போது, கேரள அரசு பேருந்தில் வந்த நபர் தனது ஆடையில் சுமார் 25 லட்சம் ரூபாயை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: வாளையாறு சோதனைச் சாவடியில் சுமார் 25 லட்சம் ரூபாயை ஆடையில் மறைத்து வைத்து கொண்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடியில் கேரள மாநில காவல் துறையினர் மற்றும் கலால் துறை அதிகாரிகள் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள அரசு பேருந்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பேருந்தில் பயணம் செய்த எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்த லட்சுமி நிவாஸ் எஸ்வந்த் (58) என்பவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை சோதனை சாவடி அறைக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.



அப்போது சட்டை மற்றும் வேட்டிக்குள் பல லட்ச ரூபாயை கட்டு கட்டுகளாக சிறிய பாக்கெட்டுகள் போல தைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.



அவரிடமிருந்து மொத்தம் 24,78,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



மேலும் அவர் எதற்காக பணத்தை எடுத்து வந்தார் என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் எஸ்வந்த் பணத்தை எடுத்து வந்த போது சோதனை சாவடிகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...