நடிகர் சத்தியராஜின் தாயார் மறைவு - அமைச்சர்கள் முத்துச்சாமி, இரகுபதி, சாமிநாதன் நேரில் அஞ்சலி

வயது மூப்பு காரணமாக காலமான நடிகர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, சத்தியராஜிக்கு ஆறுதல் கூறினர்.


கோவை: நடிகர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள் முத்துச்சாமி, இரகுபதி, சாமிநாதன் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சத்தியராஜின் தாயார் நாதாம்பாள் (93) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், இன்று, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக வீட்டுவசதி நகர்புற வளர்ச்சி, மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி, தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, நடிகர் சத்தியராஜிற்கு ஆறுதல் கூறினர். பொதுமக்களின் அஞ்சலிக்குப்பிறகு நாதாம்பாள் உடல் அனைவரது அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...