மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு – பேரனுடன் சென்றபோது விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

திருப்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து பேரனுடன் சென்ற மூதாட்டி வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி சரோஜா (வயது 60). கைத்தறி தொழிலாளி. கடந்த 7-ந் தேதி சரோஜா தனது பேரன் யோககுமாருடன் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

குண்டடம் பஸ் நிறுத்தம் முன்பு சென்றபோது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த சரோஜா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...