பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் படுஜோராக நடைபெறும் போதைப்பொருள் விற்பனை - உடனடி நடவடிக்கை தேவை என்று ஆட்சியரிடம் மக்கள் மனு

கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் படுஜோராக நடைபெறும் போதைப்பொருள் விற்பனையை தடுக்காமல் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.



கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆறுமுகம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும் அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.

அவர் மட்டுமின்றி அங்கு ஜோதிமணி, சதீஷ், ஆகியோரும் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்தே மது விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளதாக கூறினர்.



மேலும் பண பலத்தை கொண்டே அவர்கள் இவ்வாறு செயல்படுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் அங்கு மது விற்பனை நடைபெறுவதால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...