அலங்கியத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரருக்கு - மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி!

தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கேசவன் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த அலங்கியத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கேசவன் (56). இவர் முன்னாள் இந்திய ராணுவ வீரரும் தற்போது காங்கயம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாகன ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கேசவன் தனது மனைவி பரிமளா (46) மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை தாராபுரத்தில் இருந்து புறப்பட்டு முத்தூர் அருகே உள்ள ராசாத்தாவலக கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார்.



இந்தநிலையில் கேசவன் நேற்று மதியம் 3.30 மணிக்கு கோவில் முன்புறம் சாலையோரத்தில் நடந்து சென்றார். அப்போது முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக கேசவன் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கேசவனை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு கேசவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் அவரது உடல் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



அப்போது ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேசவனுக்கு முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் முன்னாள் ராணுவ வீரர் மயில்சாமி தலைமையில் மூவர்ண கொடியுடன் ஊர்வலமாக வந்து அவரது உடலுக்கு மூவர்ணக் கொடி மூர்த்தி சல்யூட் அடித்து வீர வணக்கம் செலுத்தினர்.



அப்போது தாராபுரம் கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...