கோவை வடக்கு, மேற்கு மண்டலத்தில் பல்வேறு பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆய்வு!

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்களை வழங்கிய மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு, மேற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்கு உட்பட்ட சிவாஜி காலனியில்‌ வானவில்‌ பொது அறக்கட்டளை சார்பில்‌ ரூ.1லட்சம்‌ மதிப்பீட்டில்‌ குப்பைகள்‌ சேகரிக்கும்‌ 5 தள்ளுவண்டிகள்‌, அதற்கான புதிய குப்பைத்‌ தொட்டிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ சுகாதார தூய்மை பணியாளார்களுக்கு வழங்கினார்‌.



கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட பாரதியார்‌ ரோடு, எம்‌.கே.பி.காலனி பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணி நடைபெற்று வருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அப்பகுதியில்‌ புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயார்‌ செய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோல், கோவை மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்குட்பட்ட சிவாஜி காலனியில்‌ ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...