மாணவர்களுக்கு காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது வருத்தமளிக்கிறது -மரபின் மைந்தன் முத்தையா பேச்சு

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் "கல்லூரி ஆண்டு விழா மற்றும் தமிழ்மன்றம் நிறைவு விழா" இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவிழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு சிறப்புரையற்றினார். 



அவர் பேசுகையில்; மாணவ- மாணவிகள் அமைதியாக இருந்தால் பல அர்த்தங்கள் உள்ளன. அமைதியான மாணவர்கள் ஆழமான சிந்தனை கொண்டவர்கள். கல்லூரி காலங்களில் மாணவர்கள் திறன்களை வளர்க்க வேண்டும். அதேபோன்றே இவர்களின் திறன்களை நிர்வாகமும் அங்கீகரிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புகளையும், திறன்களையும் பல சாதனைகளை கௌரவம் செய்யும் விழாதான் கல்லூரிகளின் ஆண்டு விழாக்கள். கலை மற்றும் அறிவியல் துறைகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். 

அரசு வேலைகளில் மற்றும் அரசியலிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்கள் இன்று பல உயரிய பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கு அரசியலில் காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது மிகவும் வருதமளிகிறது. தற்போதைய அரசியலில் உயர்ந்த முன்மாதிரிகள் யாரும் இல்லாததால் தவறான வழிக்கு இன்றைய இளைஞர்கள் கொண்டு செல்கின்றனர். நாம் என்ன படிக்கிறோம் என்பதை விட படிப்பினால் எவ்வளவு உயரத்தினை தொடுகிறோம் என்பதே முக்கியம். தோல்விகள், அவமானங்கள், துயரங்கள் மற்றும் கவலைகளை தோலில் சுமந்து கொண்டே இருக்காதீர்கள். இவைகளை தூக்கி எறியுங்கள் எப்பொழுதும் நிபந்தனை இல்லாத நட்பினை வளர்க்க வேண்டும் என்றார்.





இவ்விழாவில், தமிழ்மன்றத்தின் தூரிகை இதழ் சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது. மேலும் இவ்வருடத்தின் சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. இதில், கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானக்குமார், துணை முதல்வர் விஜயசாமுண்டேஷ்வரி, தேர்வு கண்காணிப்பாளர் சுனிதா, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...