சுதந்திர தினம் கொண்டாட்டம் - தனியார் பள்ளி மாணவர்கள் பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா பேரணியை மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலைக்கோவில் என்ற தனியார் பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து, மாணவ மாணவியர் மூலனூர் அரசு மருத்துவமனை முன்பு துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வடுகபட்டி பிரிவு அண்ணா நகர் வழியாக பேரணி பள்ளி வளாகம் முன்பு நிறைவடைந்தது.



பள்ளியின் தாளாளர் சுந்தரம் தலைமையில் இந்தநிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின பேரணியை பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நெஞ்சன், நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...