அரசு அறிவித்த ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் - போராட்டத்தில் குதித்த டேன் டீ தொழிலாளர்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தபடி ஒரு நாள் ஊதியமான 425 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று வால்பாறை அருகே டேன் டீ தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஊதிய பற்றாக்குறை மற்றும் வனவிலங்கு பிரச்சனையால் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. இதில் சின்கோனா,சின்னக்கல்லார், பெரியகல்லார், நீரார், உபாசி,ரயான், ஆகிய எஸ்டேட்டுகள் அரசு தேயிலைத் தோட்ட நிறுவனத்தில் செயல்பட்டு வருகின்றன. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதை அரசு இரண்டு ஆண்டுக்கு முன்பு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சராசரி ஒரு நாள் ஊதியமாக 425 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட்டது. தற்போது தனியார் எஸ்டேட் நிறுவனங்களில் இந்த 425 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம் பற்ற குறை, வனவிலங்கு பிரச்சனை அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறோம். அரசு அறிவித்த 425 ரூபாய் சம்பளத்தை டேன் டீ நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.



இதனிடையே, வால்பாறை அருகே உள்ள ஊபாசி எஸ்டேட் பகுதி தொழிலாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் அலுவலகத்திற்கு முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...