பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அடக்க வேண்டும் - தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து கோவை திருமண்டல தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் மண்டல அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தென்னிந்திய திருச்சபைகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்ணுரிமை காப்போம், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்டிப்போம் என்று ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக கோவை திருமண்டல தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் மண்டல அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கருப்பு சட்டை அணிந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் பெண்ணுரிமை காப்போம்,பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்டித்தும் கண்டன கோசங்கள் எழுப்பினர். தென்னிந்திய திருச்சபைகளின் கோவை மண்டல பிஷப் திமோத்தி ரவீந்தர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், பொருளாளர் டி.எஸ்.அமிர்தம், செயலாளர் பிரின்ஸ் கால்வின், துணை தலைவர் டேவிட் பர்ணபாஸ், வாலிபர் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் ப்ரீத்தி கரோலின், ஜேகோ சாமுவேல், உட்பட தென்னிந்திய திருச்சபைகள் கோவை மண்டல நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...