வால்பாறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் - மக்கள் அச்சம்!

வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்றிரவு 9 மணியளவில் உலா வந்த சிறுத்தையால், பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் சிறுத்தை, காட்டு யானை, கரடி, காட்டுப்பன்றி, போன்றவை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு மருத்துவமனை அருகே இரவு 9 மணி அளவில் மருத்துவமனை வளாக பகுதியில் சிறுத்தை ஒன்று சென்றுள்ளது. இது, அருகில் இருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,

சுமார் ஒன்பது மணி அளவில் மருத்துவமனையில் இருந்து செவிலியர், மருத்துவர் வரும் பொழுதும், இரண்டு சக்கர வாகனம் வரும் பொழுதும் சிறுத்தை நடமாடியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையை உடனடியாக வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...