நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 78வது நினைவு நாள் - இரத்ததான கழகம் சார்பில் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-ன் 78 வது நினைவு நாளையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரத்ததான கழகம் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



கோவை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு நாளை ஒட்டி கோவையில் ரத்ததான கழகம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-சின் 78 வது நினைவு நாளையொட்டி நாடு முழுவதும் அவரது திரூஉருவச் சிலைகளுக்கு பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-சின் 78 வது நினைவு நாளை ஒட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரத்ததான கழகம் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கி சுபாஸ் சந்திரபோஸ் வீரவரலாறு குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து நேதாஜியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் அருகில் இருந்த மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் திருவுருவ சிலைகளுக்கும் மாலைகள் சூடி மரியாதை செய்தனர்.



இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அகில் சந்திரசேகர், பேங்க் முருகேசன், துரை செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், ஜெனார்த்தனன், ரேகா, கூடலூர் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா, பள்ளி கல்விக்குழுவை சேர்ந்த பொன் மாடசாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரத்ததான கழகத்தை சேர்ந்த கே.ஆர்.செல்வம், கே.ராஜகோபால், பி.முத்துராஜா, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் நண்பர்கள் நற்பணி மன்ற செயலாளர் ஆனந்தபாபு, படையப்பா மற்றும் ஊர் பெரியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...