ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா - அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.



கோவை: ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகர் அருளை பெற்றனர். இந்தவிழாவில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவையில் மிகவும் பழமை வாய்ந்த பொள்ளாச்சி சாலையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குருமரகுருபர சுவாமிகள் தலைமையில் சிறப்பு வேள்வி யாக பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மேல தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி புனித நீர் எடுத்துவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டது.

இதனையடுத்து பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஈச்சனாரி விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...