வால்பாறையில் பெண் தொழிலாளியை கடித்து புரண்ட கரடி - படுகாயமடைந்த பெண் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி ஒன்று வேலைக்கு சென்ற பெண் தொழிலாளியை கடித்து புரண்டுள்ளது. இதில் கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண்ணுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கமலம் என்ற பெண் தொழிலாளி இன்று காலையில் தேயிலை பறிப்பதற்காக தேயிலை தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராவிதமாக பதுங்கியிருந்த கரடி அவரை தாக்கியது சக தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாடர்பால்ஷ் எஸ்டேட் 3 வது டிவிசன் பகுதியில் குடியிருந்து வருபவர் கமலம் வயது 59. இன்று காலை தேயிலை தோட்ட வேலைக்கு சென்று உள்ளார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி தொழிலாளியை தாக்கியது. இதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. முதல் உதவி சிகிச்சைக்காக எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.



பின்னர், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் கொண்டு சென்று உள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...