கோவை தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில்‌ ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ குறிச்சி, குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌, மூலதன மானிய நிதி (CGF) திட்டத்தின் கீழ்‌ ரூ.498 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர்‌ வடிகால்‌ கட்டுமான பணிகள்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ புட்டுவிக்கி சாலையில்‌ குறிச்சி - குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ்‌ குழாய்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ குனியமுத்தூர்‌, சுகுணாபுரம்‌, மைல்கல்‌ ஆகிய பகுதியில்‌ பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதையும்‌, வார்டு எண்‌.87, 88-க்குட்பட்ட ஜெ.லெ.நகர்‌, பாலக்காடு பிரதான சாலை, அம்மன்‌ கோவில்‌ சாலை, லட்சுமி நகர்‌ முதல்‌ சிறுவாணி டேங்‌க் வரை மூலதன மானிய நிதி (CGF) திட்டத்தின்கீழ்‌ ரூ.498 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர் வடிகால்‌ கட்டுமானப்பணி நடைபெற்று வருவதையும்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



குறிச்சி - குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப் பணிகளில்‌ தற்போது நடைபெற்று வரும்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை உடனடியாக செப்பனிடவும்‌, மேலும்‌, குழாய்‌ பதிக்கும்‌ பணிகளை இரண்டு மாத காலத்திற்குள்‌ முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்‌ மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...