கோவையில் பாதாள சாக்கடை உள்ள வீடுகள் கணக்கெடுப்பு பணி - பொதுமக்கள் ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், கணக்கெடுப்பு பணிக்கு வரும் அதிகாரிகளிடம் சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது, குடிநீர் இணைப்பு எண் மற்றும் பாதாள சாக்கடை வைப்புத் தொகை ரசீது உள்ளிட்டவற்றின் நகல்களை வழங்கி ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட தங்கள்‌ பகுதியில்‌ பாதாள சாக்கடை இணைப்பு பெற்ற வீடுகளை பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தங்கள்‌ வீட்டிற்கு மாநகராட்சி ஊழியா்கள்‌ கணக்கெடுக்கும் பணிக்கு வரும்போது கீழ்கண்ட ஆவணங்களை நகல்‌ எடுத்து (ஜெராக்ஸ்‌) கணக்கெடுப்பிற்கு வரும்‌ மாநகராட்சி ஊழியர்களிடம்‌ கொடுத்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

1. சொத்துவரி இரசீது எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌ (xerox copy of Property Tax).

2. மின்சார கட்டண இரசீது (Xerox Copy of Latest Electricity Bill) நகல்.

3. குடிநீர் இணைப்பு எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌.

4. பாதாள சாக்கடை தொடர்பான வைப்புத்தொகை ஏற்கனவே செலுத்தி இருந்தால்‌ அதற்கான புகைப்பட நகல்‌.

01.08.2023 முதல்‌ திருத்தியமைக்கப்பட பாதாள சாக்கடை திட்ட இணைப்புகளுக்கான கட்டண விபரம்‌ பின்வருமாறு,

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...