ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு - கருப்பு கொடி காட்டிய அனைத்து முற்போக்கு அமைப்பினர் கைது

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இவருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து முற்போக்கு அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



கோவை: தமிழக சட்டமன்றத்தையும், தமிழ மக்களின் உணர்வுளையும் மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதற்காக அவர் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து, சாலை மார்க்கமாக பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். விமான நிலையத்திலிருந்து லாலி ரோடு வழியாக பாரதியார் பல்கலைக்கழகம் செல்கிறார்.

இந்நிலையில் லாலி ரோடு பகுதியில் அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் ஆளுநர் செயல்படுவதாக புகார் கூறி இந்த கருப்புக்கொடி போராட்டம் நடைபெறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.



இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...