உடுமலை அருகே சாலையில் உலா வந்த படையப்பா யானை - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை , உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்டதும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே மறையூர் பேருந்து நிலையம் பகுதியில் படையப்பா யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை, உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களும் அச்சமடைந்து வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.



ஆனால் அந்த யானை எந்தவித அசம்பாவிதமும் செய்யாமல் சாலையை கடந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேயிலை தோட்டத்தை நோக்கி சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இருப்பினும் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...