ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் - கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 பேர் கைது

கிணத்துக்கடவு பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.




கோவை: மறைவான இடத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, பின்னர், கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருப்பதாக காவல்துறையில் சிக்கிய இரண்டு பேர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், கிணத்துக்கடவு - பாலார்பதி ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை சோதனையிட்டனர்.

அதில், தலா 40 கிலோ எடை கொண்ட, நான்கு மூட்டைகளில் மொத்தம் 160 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார் பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பாலார்பதியை சேர்ந்த சரவணக்குமார் 23, சென்றாம்பாளையம் சபாபதி43 ஆகியோர் என்பதும், சென்றாம்பாளையம், தாமரைக்குளம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வீட்டின் அருகில் உள்ள மறைவான இடத்தில் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

இதை, கேரளா மாநிலத்தில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.



இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...