கோவை வேளாண் பல்கலையில் 2 தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கல்!

கோவை வேளாண் பல்கலையின் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் சார்பில் மத்திய தொழில்‌ மற்றும்‌ உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை‌ நிதியுதவியுடன், தொழில்முனைவோரின் தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக 2 தொழில்முனைவோர்களுக்கு SISFS நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை வேளாண் பல்கலையில் தொழில்முனைவோரின் தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக 2 தொழில்முனைவோர்களுக்கு SISFS நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌, தொழில்நுட்ப வணிக காப்பகமானது மத்திய அரசின்‌ வர்த்தக மற்றும்‌ தொழில் துறை அமைச்சம்‌, தொழில்‌ மற்றும்‌ உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஆகியவற்றின்‌ நிதியுதவியுடன்‌ 2022 முதல்‌ இந்திய தொழிலமுனையவோர்களுக்கான ஆரம்ப மூலதன திட்டத்தின்‌ (Startup India Seed fund Scheme - SISFS) மையமாக திகழ்கிறது.

இத்திட்டமானது தொழில்‌ முனைவோர்களின் கருத்தாக்கம், முன்மாதிரி மேம்பாடு, தயாரிப்பு பொருட்களை சோதனை செய்தல், சந்தைப்படுத்துதல்‌ மற்றும்‌ வணிகமயமாக்கல்‌ போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ வணிக கருத்தின்‌ ஆதாரம்‌ காண்பித்தல், முன்மாதிரி உருவாக்குதல்‌, தயாரிப்புகளுக்கான சாதனைகள்‌ ஆகியவற்றிற்கு ரூ.20 லட்சம்‌ வரை மானியமாக வழங்கப்படுகிறது. மேலும்‌ சந்தைப்படுத்துதல்‌, வணிகமயமாக்கல்‌ மாற்றத்தக்க கடன்‌ வழியில்‌ வணிகத்தை மேம்படுத்துதல்‌ ஆகியவற்றிற்கு ரூ.50 லட்சம்‌ வரை முதலீடு தொகையாக வழங்கப்படுகிறது.



485 விண்ணப்பதாரர்கள்‌ ISMC குழுவினரால்‌ திரையிடப்பட்டு இரண்டு தொழில்‌ முனைவோர்கள்‌ சந்தோஷ்‌ (நிறுவனர்‌, COCO SCIENCE) மற்றும்‌ சிரஞ்சீவி ராஜன்‌ (SSNS BIO GARDEN PVT LTD) ஆகியோரின் தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சம்‌ வரையிலான நிதியுதவியை மானியமாக பெற தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்‌.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி,‌ அவர்களிடம் தங்கள்‌ புதுமை தயாரிப்பு குறித்தும்‌ அதன்‌ மேம்பாடு குறித்தும்‌ கலந்துரையாடினர்‌. மேலும்‌ முதற்‌கட்ட நிதியுதவி ரூ.6 லட்சத்திற்கான அனுமதி உத்தரவு பெற்றனர்‌. தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ மற்றும்‌ தொழில்நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல அதிகாரி ஞானசம்பந்தம்‌ ஆகியோர் கலந்து கொண்டனர்‌. வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்‌ இந்த திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தி கொள்வர்‌.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...