வால்பாறையில் 61 பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று முதல் துவக்கம்!

வால்பாறையில் உள்ள 61 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் இன்று முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு காலையில் இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி போன்ற விதவிதமான உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் உள்ள 61 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 89 பள்ளிகள் உள்ளன. இதில் 61 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் 1,110 மாணவ மாணவிகள்படித்து வருகின்றனர், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் இன்று முதல் துவக்கப்பட்டது.



இந்த நிலையில் வால்பாறை நகராட்சி சார்பாக 61 பள்ளிகளுக்கு 4 மையங்கள் அமைத்து 12 வாகனங்களில் மூலமாக உணவுகள் விநியோக செய்யப்படுகிறது, இதில் இன்று காலை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருக்கும் காலை உணவு திட்ட வளாகத்தில் இருந்து உணவுகள் கொண்டு செல்லப்பட்டது.



காலையில் இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித உணவுகள் பள்ளி குழந்தைகளுக்குவழங்கப்படும். இந்த உணவு காலை எட்டு முப்பது மணி அளவில் பள்ளிகுழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் பள்ளி நிர்வாக தலைவர் இதற்கு பொறுப்பு ஏற்று நிர்வாகத்தை செயல்படுத்துவார் என்றும் தெரிவித்தார்.

மேலும் புறநகர் பகுதியான பெரிய கல்லார், சின்னக் கல்லார், சின்கோனா, ஊபாசி, சக்தி தலனார், வாட்டர் பால்ஸ், காடம்பாறை, குரங்குமுடி, உறுளிக்கள் ஆகிய 15 பள்ளிகளுக்கு பள்ளி நிர்வாகமே காலை உணவு தயார் செய்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் சுதாகர், மற்றும் நகர துணை தலைவர் தா.மா.செந்தில், மற்றும் 10 வாது வார்டு உறுப்பினர் காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...