சூலூரில் காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்!

சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட துவக்க விழா நிகழ்ச்சியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறினார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த காலை உணவு திட்ட துவக்க விழா கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம், சூலூர் தாலுகா இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறினார்.

முன்னதாக இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கே.கீதாஞ்சலி, வரவேற்புரை ஆற்றினார். சிறப்புரை நிகழ்த்திய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழ்நாட்டில் இன்று துவக்கப்படும் காலை உணவு திட்டம் மாபெரும் வெற்றி பெறும்.



இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் ஊட்டச்சத்து பெறுவார்கள். அவர்களது கல்வித்திறன் மேம்படும் . பொதுக் கல்வியை பலப்படுத்த இத்திட்டம் உதவி செய்யும். இன்று சந்திராயன் 3 வெற்றியை நாடே கொண்டாடுகிறது.

இந்த மூன்று திட்டங்களிலும் திட்ட இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை. அதைவிட முக்கியமானது அந்த மூன்று திட்ட இயக்குநர்களும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் . எனவே தான் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றார்.

தனது கனவு திட்டமாக இதை இவர் முன்னிறுத்துகின்றார். ஏற்கனவே தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் பல்வேறு சமுக நலத்திட்டங்களை போலவே, முதலமைச்சர் முத்தாய்ப்பான இந்த திட்டமும் முழு வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

துவக்க விழா நிகழ்வில் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி அவர்கள், சூலூர் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச் செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், இருகூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஜி.ஜெயக்குமார், இருகூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், முருகசாமி, ஆனந்தன், இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...