தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா - உடுமலையில் தேமுதிகவினர் உற்சாக கொண்டாட்டம்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் தேமுதிகவினர் 10 கிலோ கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், ராஜகாளியம்மன் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, உடுமலைபேட்டையில், தேமுதிகவினர் அவர் உடல் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.



தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் 10 கிலோ கேக் வெட்டி விழாவை துவக்கி வைத்தார்.



பின்னர் பெரிய கோட்டை ஊராட்சியில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.



உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் பழனி ஆண்டவர் நகர் கோமதி நகர் கொல்லம் பட்டறை உட்பட 7க்கு மேற்பட்ட இடங்களிலும் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசக்தி காலனி சங்கர் நகர் செல்லப்பம்பாளையம் மானுப்பட்டி உரல் பட்டி ஊராட்சிகளில் தேமுதிக கொடியேற்றி இனிப்புகள் மற்றும் அன்னதானம் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டது.

மேலும் எரிசனம்பட்டியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்காக இரண்டு எடை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.



சிவசக்தி காலணியில் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

மாவட்ட கழக செயலாளர் ஆறுசாமி தலைமை தாங்கினார், மாவட்ட கழக தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை , துணைச் செயலாளர்கள் ரமேஷ் பாபு, ஆலாம் பாளையம் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் ஜி.கே என்கிற கணேஷ்குமார் பொதுக்குழு உறுப்பினர்கள் கிரி, பெரியசாமி, குணசேகரன் உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் துரை கண்ணன் மற்றும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...