கோவையில் அனல் பறக்க நடந்த கார், பைக் ரேஸ் - மெய்மறந்து பார்த்த பார்வையாளர்கள்

கோவையில் எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் கார்,பைக் ரேஸ் நடைபெற்றது. இதில் அனல் பறக்க சென்ற வீர்ர், வீராங்கனைகளை சாலையில் இருபுறங்களிலும் நின்றிருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



கோவை: கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டியில் தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.



எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் 26-வது ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு, அதன் முதல் சுற்று போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் ஆரம்பமானது.



ஜேகே டயர் நோவிஸ் கோப்பைக்கா கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்க்கான இருசக்கர வாகன பந்தயம் என மூன்று பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

10 சுற்று 15 சுற்று என வெவ்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தேசிய அளவில் சிறந்த கார்பந்தய வீரர்களான தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 20 பேர் என பங்கேற்று போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

முதல் சுற்று போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்த சுற்றுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது.



அனல் பறக்க நடந்த இந்த ரேசில், சீறிப்பாய்ந்த கார், பைக் வாகனங்களை பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து பார்த்தது ரசித்தனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...