பணி நிரந்தரம் செய்க… - பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தமிழக அரசு ஓரிரு நாட்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என பகுதி நேர சிறப்பாசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.



பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இச்சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் 12,200 ரூபாய் நியமனத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகவும், வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் 10,000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.

தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருவதாக கூறினர். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும், என தெரிவித்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் தங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை எனக் கூறினர்.

எனவே தமிழக அரசு ஓரிரு நாட்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...