லாரி மோதி காட்டு மாடு சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம் - ஓட்டுநரை பிடித்து காவல்துறை விசாரணை

கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: லாரி மோதி உயிரிழந்த காட்டுமாடு பிரேத பரிசோனை செய்யப்பட்டது. இதில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் காட்டு மாடுகள், மான்கள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் உள்ளன. இவைகள் ஆனைகட்டி கோவை சாலையில் அவ்வப்பொது கடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே காட்டு மாடுகள் இரண்டு சாலையை கடந்துள்ளன. அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டு மாடு காயமடைந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இன்று காலை சுமார் கோவை வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், கோவை வனச்சரக அலுவலர், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் பிரேத பரிசோதனை செய்தார்.

பிரேத பரிசோனையில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...