பற்றி எரிந்த பனியன் ஏற்றுமதி நிறுவனம் - பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், நேற்று மாலையில் தொழிலாளர்கள் பணி முடிந்து வெளியேறிய சிறிது நேரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.



இதன் காரணமாக பனியன் நிறுவனத்திலிருந்து கரும்புகை அதிகளவில் வெளியேறியது.



இதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

பனியன் நிறுவனம் 3000 அடிக்கும் மேற்பட்ட சதுர அடியிலுள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம்டைந்தன.

தீ விபத்திற்கான காரணம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ நடந்த இடத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் நேரடியாக பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...